நல்ல நிறத்தில் வரி தெரியும் பாதிரிப்
பூ வாடும்படிக் காற்று வீசுகிறது. முல்லை நிலத்தில் மழைக்கட்டி ஆலிகள் உருளும்படி மழை
பொழிக்கிறது. இது ஒருத்தியை மட்டும் வாடச் செய்கிறதே.
![]() |
| பாதிரி மலர் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
வரி நிறப் பாதிரி
வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண்
புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம்
இழிய, எழுமே
நெருநல், ஒருத்தி திறத்து. 3
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment