![]() |
| ஒண்டொடி | ஒண் தொடி ஒளி மிக்க வளையல் அணிந்தவள் |
இந்ந ஒண்டொடி எதற்காக அவனை நினைத்து நெஞ்சை
வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும்
மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது.
அவர் வந்துவிடுவார் அன்றோ?
தோழி சொல்கிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
கண் திறள் முத்தம்
கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி
புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும்
கொண்டன்று; எவன் கொலோ,
ஒண்டொடி! ஊடும் நிலை? 23
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.

No comments:
Post a Comment