Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 22

போர் வீரர்களாகிய இளையர் ஈரக் கண்ணோடு பார்க்கின்றனர்.
குதிரைகளும் குஞ்சம் கட்டிப் பொலிவுடன் காணப்படுகின்றன.
பெண்ணின் இளமை நலம் போலக் காடு பூத்திருக்கிறது.
வளமுடையார் செல்வம் போல காடு நிறைவுடன் காணப்படுகிறது.
தலைவன் நினைவு.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு.        22

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment