Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 20

பெருமிதம் கொண்ட மன்னனின் போர்தொழில் மடிந்துவிட்டது. வழியெங்கும் மழை பொழிந்து பதமாக உள்ளது. நஞ்சு-மணி கொண்ட நாகம் நடுங்கும்படி இடி முழங்குகிறது. போருக்கெழுந்த மன்னன் படை போல மழைமேகக் கூட்டம் செல்கிறது.
நானும் திரும்பவேண்டும்.
தலைவன் இப்படி நினைக்கிறான்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.               20

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment