![]() |
| குறிஞ்சி |
திருந்திய அணிலன்களைப் பூண்டவளே!
குவிந்த கொத்துகளில் பூத்திருக்கும் குருந்த
மலரில் இருந்துகொண்டு தேனீக்கள் பாடுகின்றன்ன. தும்பிகள் ஊதுகின்றன. இதுதான் அறிகுறி.
காதலர் கைவிடுபவர் அல்லர்.
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்
குருந்தின் குவி இணர் உள்
உறை ஆகத்
திருந்து இன் இளி வண்டு
பாட, இருந் தும்பி
இன் குழல் ஊதும்
பொழுது. 15
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.

No comments:
Post a Comment