விடங்கம் என்றும், மாகாளம் என்றும் போற்றப்படும்
ஏழு ஊர்கள் - விடங்கம் ஏழ் ஆதி இடங்கொள் மாகாளம் மேழும்
- வீதிவிடங்கம் எனப் போற்றப்படும் திருவாரூர் - வீதி விடங்கம் ஆரூர்
- திருவெண்காடு - வெண்காடும்
- சிவன் நடனமாடும் தில்லை மூதூர் - நடம் கொளும் தில்லை மூதூர்
- திரு ஐயாறு - பஞ்ச நன் நதி
- சாய்க்காடு - சாய்க்காடும்
- திருவிடை மருதூர் - இடைமருதூர்
- திருச்செங்காட்டங்குடி - செங்காடும்
என்பன தொடங்கிப் பேசப்படும் ஏழு ஊர்களிலும்
தருமம் சிறக்கும்படிச் செய்யும் செங்குந்தர் நலமுடன் வாழ்வார்களாக - தொடங்கிய தரும ஆட்சிச் செங்குந்தர் தொகுதி வாழி. 5
பாடல்
விடங்கமே ழாதி வீதி விடங்கமா ரூர்வெண் காடும்
நடங்கொளுந் தில்லை மூதூர் பஞ்சநன் னதிசாய்க்
காடும்
இடங்கொள்மா காளமேழு மிடைமரு தூர்செங் காடும்
தொடங்கிய தரும வாட்சிச் செங்குந்தர் தொகுதிவாழி.
5
விடங்கம் ஏழ் ஆதி வீதி விடங்கம் ஆரூர் வெண்காடும்
நடம் கொளும் தில்லை மூதூர் பஞ்ச
நன் நதி சாய்க்காடும் இடங்கொள் மாகாளம் மேழும்
இடைமருதூர் செங்காடும் தொடங்கிய தரும ஆட்சிச் செங்குந்தர் தொகுதி வாழி. 5
ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி
எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.
No comments:
Post a Comment