![]() |
முதியோன் மேனி அழகு |
9. நல்கூர்ந்த
பத்து
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களுக்கெல்லாம்
சொல்கிறேன்.
- முறையில்லாமல் அரசாளும் மன்னன் நாடு வறுமையில் வாடும். 81
- அதிக ஆண்டுகளாகி மூத்தவன் காமம் வறுமையில் வாடும். 82
- பகைவனாகி உடனிருப்பவனின் சேர்க்கை பயனின்றி வறுமையில் வாடும். 83
- நோயில் வருந்துபவன் பெற நினைக்கும் இன்பம் பெறமுடியாமல் வறுமையில் வாடும். 84
- தன்னைப் போற்றாத கணவனிடம் போட்ட பிணக்கு தீர்க்கப்படாமல் வறுமையில் வாடும். 85
- மூத்தவன் மேனி அழகு பெறமுடியாமல் வறுமையில் வாடும். 86
- சொல் எடுபடாதபோது சொல்லும் சொல் பயன்றறு வறுமையில் வாடும். 87
- வறுமை அடைந்தவன் வீட்டுக்குச் செல்வோன் எதுவும் பெற முடியாமல் வறுமையில் வாடும். 88
- அச்சம் இல்லாத சினம் தாக்கப்பட்டு வறுமையில் வாடும். 89
- நண்பர் அல்லாதவரிடம் செல்பவன் வறுமையில் வாடும். 90
பாடல்
9. நல்கூர்ந்த
பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
- முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. 81
- மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று. 82
- செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று. 83
- பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று. 84
- தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று. 85
- முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று. 86
- சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று. 87
- அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று. 88
- உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று. 89
- நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று. 90
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment