![]() |
காமம் |
தவிர்க்கமாட்டான்
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களுக்கெல்லாம்
சொல்கிறேன்.
- ஒங்கி உயர்ந்து வாழ விரும்பபுபவன் உயர்ந்த கருத்துக்களைத் தவிர்க்கமாட்டான். 91
- பெருக விரும்புபவன் பலரது புகழைத் தவிர்க்கமாட்டான். 92
- கற்க விரும்புபவன் ஆசிரியரை வழிபடுவதைத் தவிர்க்கமாட்டான். 93
- நிலைபேற்றினை விரும்புபவன் தவம் செய்வதைத் தவிர்க்கமாட்டான். 94
- நல்ல வாழ்க்கையை விரும்புபவன் பிறரோடு சூழ்ந்திருப்பதைத் தவிர்க்கமாட்டான். 95
- மேன்மையை விரும்புபவன் தகுதியைக் காப்பாற்றிக் கொள்வதிலிருந்து தவிர்க்கமாட்டான். 96
- இன்பம் பெற விரும்புபவன் துன்பம் வருவதைத் தவிர்க்கமாட்டான். 97
- துன்பம் வேண்டுபவன் இன்பம் பெறுவதைத் தவிர்க்கமாட்டான். 98
- பாதுகாப்பை விரும்புபவன் முறையாக நடந்துகொள்வதைத் தவிர்க்கமாட்டான். 99
- காமத்தை விரும்புபவன் கண்ணடிப்பதைத் தவிர்க்கமாட்டான். 100
பாடல்
10. தண்டாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
- ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான். 91
- வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான். 92
- கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். 93
- நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான். 94
- வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். 95
- மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான். 96
- இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான். 97
- துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான். 98
- ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான். 99
- காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான். 100
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment