Pages

Friday, 24 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 91-100

காமம்
தவிர்க்கமாட்டான்
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களுக்கெல்லாம் சொல்கிறேன்.
  1. ஒங்கி உயர்ந்து வாழ விரும்பபுபவன் உயர்ந்த கருத்துக்களைத் தவிர்க்கமாட்டான். 91
  2. பெருக விரும்புபவன் பலரது புகழைத் தவிர்க்கமாட்டான். 92
  3. கற்க விரும்புபவன் ஆசிரியரை வழிபடுவதைத் தவிர்க்கமாட்டான். 93
  4. நிலைபேற்றினை விரும்புபவன் தவம் செய்வதைத் தவிர்க்கமாட்டான். 94
  5. நல்ல வாழ்க்கையை விரும்புபவன் பிறரோடு சூழ்ந்திருப்பதைத் தவிர்க்கமாட்டான். 95
  6. மேன்மையை விரும்புபவன் தகுதியைக் காப்பாற்றிக் கொள்வதிலிருந்து தவிர்க்கமாட்டான். 96
  7. இன்பம் பெற விரும்புபவன் துன்பம் வருவதைத் தவிர்க்கமாட்டான்.  97
  8. துன்பம் வேண்டுபவன் இன்பம் பெறுவதைத் தவிர்க்கமாட்டான். 98
  9. பாதுகாப்பை விரும்புபவன் முறையாக நடந்துகொள்வதைத் தவிர்க்கமாட்டான். 99
  10. காமத்தை விரும்புபவன் கண்ணடிப்பதைத் தவிர்க்கமாட்டான். 100  


பாடல்
10. தண்டாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
  1. ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான். 91
  2. வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான். 92
  3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். 93
  4. நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான். 94
  5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். 95
  6. மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான். 96
  7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான். 97
  8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான். 98
  9. ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான். 99
  10. காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான். 100


மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment