![]() |
சுவையான உணவு "இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்" திருக்குறள் 946 |
யாருக்கு எது எளிது
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களில் யார் யாருக்கு
எது எது எளிது?
- புகழை விரும்புபவர்களுக்கு தேவர் உலகம் எளிது. 71
- மாறுபட்டு நிற்பவர்களுக்கு துன்புறும் போர் எளிது. 72
- அன்பை விரும்புபவர்களுக்கு வேண்டும் கொடையை நல்குதல் எளிது. 73
- கோள் சொல்லுதலை விரும்புபவர்களுக்கு மறைக்கவேண்டிய செய்தியை வெளிப்படுத்துதல் எளிது. 74
- துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவர்களுக்கு இன்பம் கொள்ளுதல் எளிது. 75
- இன்பம் விரும்புபவர்களுக்கு துன்பம் தானே வருதல் எளிது. 76
- உணவைப் பெரிதும் விரும்புபவர்களுக்கு நோய் வருதல் எளிது. 77
- பார்க்கும் பெண்களையெல்லாம் விரும்புவர்களுக்குப் பழி வருதல் எளிது. 78
- மற்றவர்களின் பாரத்தைச் சுமப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்துகொண்டு உண்ணுதல் எளிது. 79
- துணை இல்லாதவர்கள் பகைவரால் கொல்லப்படுதல் எளிது. 80
பாடல்
8. எளிய பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
- புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது. 71
- உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது. 72
- ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது. 73
- குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. 74
- துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது. 75
- இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது. 76
- உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது. 77
- பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது. 78
- பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது. 79
- சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது. 80
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment