Pages

Thursday, 23 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 71-80

சுவையான உணவு
"இழிவு அறிந்து
உண்பான்கண்
இன்பம் போல்
நிற்கும்
கழிபேர்
இரையான்கண்
நோய்"
திருக்குறள்
946
யாருக்கு எது எளிது
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களில் யார் யாருக்கு எது எது எளிது?
  1. புகழை விரும்புபவர்களுக்கு தேவர் உலகம் எளிது. 71
  2. மாறுபட்டு நிற்பவர்களுக்கு துன்புறும் போர் எளிது. 72
  3. அன்பை விரும்புபவர்களுக்கு வேண்டும் கொடையை நல்குதல் எளிது. 73
  4. கோள் சொல்லுதலை விரும்புபவர்களுக்கு மறைக்கவேண்டிய செய்தியை வெளிப்படுத்துதல் எளிது. 74
  5. துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவர்களுக்கு இன்பம் கொள்ளுதல் எளிது. 75
  6. இன்பம் விரும்புபவர்களுக்கு துன்பம் தானே வருதல் எளிது. 76
  7. உணவைப் பெரிதும் விரும்புபவர்களுக்கு நோய் வருதல் எளிது. 77
  8. பார்க்கும் பெண்களையெல்லாம் விரும்புவர்களுக்குப் பழி வருதல் எளிது. 78
  9. மற்றவர்களின் பாரத்தைச் சுமப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்துகொண்டு உண்ணுதல் எளிது. 79
  10. துணை இல்லாதவர்கள் பகைவரால் கொல்லப்படுதல் எளிது. 80


பாடல்
8. எளிய பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
  1. புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது. 71
  2. உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது. 72
  3. ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது. 73
  4. குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. 74
  5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது. 75
  6. இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது. 76
  7. உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது. 77
  8. பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது. 78
  9. பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது. 79
  10. சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது. 80


மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment