![]() |
தவம் |
எது பொய்
ஆரவாரம் மிக்க உலகில் வாழும் மக்களுக்கெல்லாம்
எது பொய்?
- பெரிதும் அறிவுடையவன் வாழமாட்டான் என்பது பொய். 61
- பெருஞ்சிறப்புப் பெற்றவன் சினம் கொள்வான் என்பது பொய். 62
- கள் உண்பவன் சோர்வில்லாமல் இருப்பான் என்பது பொய். 63
- காலம் பார்த்துச் செயல்படாதவன் கையடி படமாட்டான் என்பது பொய். 64
- எதிர்கால வருவாயை அறிந்துகொள்ளாதவன் தன்னைக் காத்துக்கொள்வான் என்பது பொய். 65
- வஞ்சனை செய்து காய்பவன் உயர விரும்புதல் பொய். 66 (ஏமாந்து போவான்)
- தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளாதவன் பெருமையை விரும்புவது பொய். 67. (பொறுமை பெருமை தரும்)
- பெருமையைக் காத்துக்கொள்ளாதவன் சிறுமைப்படமாட்டான் என்பது பொய். 68
- பொருளாசை கொண்டவன் முறை செய்வான் என்பது பொய். 69
- மனத்தூய்மை இல்லாதவன் தவம் செய்வான் என்பது பொய். 70
பாடல்
7. பொய்ப்
பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு
எல்லாம்-
- பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய். 61
- பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய். 62
- கள் உண்போன் சோர்வு இன்மை பொய். 63
- காலம் அறியாதோன் கையுறல் பொய். 64
- மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய். 65
- உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய். 66
- சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய். 67
- பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய். 68
- பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். 69
- வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய். 70
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment