Pages

Thursday, 23 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 61-70

தவம்
எது பொய்

ஆரவாரம் மிக்க உலகில் வாழும் மக்களுக்கெல்லாம் எது பொய்?
  1. பெரிதும் அறிவுடையவன் வாழமாட்டான் என்பது பொய். 61
  2. பெருஞ்சிறப்புப் பெற்றவன் சினம் கொள்வான் என்பது பொய். 62
  3. கள் உண்பவன் சோர்வில்லாமல் இருப்பான் என்பது பொய். 63
  4. காலம் பார்த்துச் செயல்படாதவன் கையடி படமாட்டான் என்பது பொய். 64
  5. எதிர்கால வருவாயை அறிந்துகொள்ளாதவன் தன்னைக் காத்துக்கொள்வான் என்பது பொய். 65
  6. வஞ்சனை செய்து காய்பவன் உயர விரும்புதல் பொய். 66 (ஏமாந்து போவான்)
  7. தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளாதவன் பெருமையை விரும்புவது பொய். 67. (பொறுமை பெருமை தரும்)
  8. பெருமையைக் காத்துக்கொள்ளாதவன் சிறுமைப்படமாட்டான் என்பது பொய். 68
  9. பொருளாசை கொண்டவன் முறை செய்வான் என்பது பொய். 69
  10. மனத்தூய்மை இல்லாதவன் தவம் செய்வான் என்பது பொய். 70


பாடல்
7. பொய்ப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
  1. பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய். 61
  2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய். 62
  3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய். 63
  4. காலம் அறியாதோன் கையுறல் பொய். 64
  5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய். 65
  6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய். 66
  7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய். 67
  8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய். 68
  9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். 69
  10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய். 70


மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment