![]() |
இரத்தல் |
எது பெரிது இல்லை
ஆரவாரம் மிக்க உலகில் வாழ்பவர்களுக்கு எல்லாம்
எது பெரிது இல்லை?
- மக்கள் செல்வத்தை விட மேலான செல்வம் இல்லை. 51
- உலகத்தோடு ஒத்துப்போகும் ஒப்புரவை விட மேலான வருவாய் இல்லை. 52
- வாழ வாய்பளிக்கும் வழக்கத்தை விட மேலான வழக்கம் இல்லை. 53
- வாழ வாய்ப்பளிக்காத வழக்கத்தை விடத் தீய வழக்கம் இல்லை. 54
- பிறருக்குக் கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறைத்துவைப்பதை விடக் கொடுமை வேறொன்றும் இல்லை. 55
- தன் நிலைமையைச் சொல்ல முடியாத நிலைமையைக் காட்டிலும் சாவு வேறொன்றும் இல்லை. 56
- ஆசையைக் காட்டிலும் வறுமை வேறொன்றும் இல்லை. 57
- புகழைக் காட்டிலும் மிஞ்சிநிற்பது வேறொன்றும் இல்லை. 58
- பிச்சை வாங்கலைக் காட்டிலும் ஏளனம் வேறொன்றும் இல்லை. 59
- வாங்கிக்கொள்வோருக்குக் வழங்குவதைக் காட்டிலும் ஒருவன் அடையும் சிறப்பு வேறொன்றும் இல்லை. 60.
பாடல்
6. இல்லை
பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு
எல்லாம்-
- மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை. 51
- ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை. 52
- வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை. 53
- வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை. 54
- இயைவது கரத்தலின் கொடுமை இல்லை. 55
- உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை. 56
- நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை. 57
- இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை. 58
- இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை. 59
- இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை. 60
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment