Pages

Thursday, 23 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 51-60

இரத்தல்
எது பெரிது இல்லை
ஆரவாரம் மிக்க உலகில் வாழ்பவர்களுக்கு எல்லாம் எது பெரிது இல்லை?
  1. மக்கள் செல்வத்தை விட மேலான செல்வம் இல்லை. 51
  2. உலகத்தோடு ஒத்துப்போகும் ஒப்புரவை விட மேலான வருவாய் இல்லை. 52
  3. வாழ வாய்பளிக்கும் வழக்கத்தை விட மேலான வழக்கம் இல்லை. 53
  4. வாழ வாய்ப்பளிக்காத வழக்கத்தை விடத் தீய வழக்கம் இல்லை. 54
  5. பிறருக்குக் கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறைத்துவைப்பதை விடக் கொடுமை வேறொன்றும் இல்லை. 55
  6. தன் நிலைமையைச் சொல்ல முடியாத நிலைமையைக் காட்டிலும் சாவு வேறொன்றும் இல்லை. 56
  7. ஆசையைக் காட்டிலும் வறுமை வேறொன்றும் இல்லை. 57
  8. புகழைக் காட்டிலும் மிஞ்சிநிற்பது வேறொன்றும் இல்லை. 58
  9. பிச்சை வாங்கலைக் காட்டிலும் ஏளனம் வேறொன்றும் இல்லை. 59
  10. வாங்கிக்கொள்வோருக்குக் வழங்குவதைக் காட்டிலும் ஒருவன் அடையும் சிறப்பு வேறொன்றும் இல்லை. 60.


பாடல்

6. இல்லை பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
  1. மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை. 51
  2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை. 52
  3. வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை. 53
  4. வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை. 54
  5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை. 55
  6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை. 56
  7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை. 57
  8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை. 58
  9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை. 59
  10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை. 60


மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment