Pages

Thursday, 23 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 41-50

நல்லது அன்று
பெரிது அன்று
“நன்று பெரிது ஆகும்” – தொல்காப்பியம் உரியியல்

ஆரவாரம் மிக்க உலகில் வாழ்பவர்களுக்கெல்லாம் அது அதுவாகாத நிலை எப்போது?
  1. குடும்ப நீரோட்டம் அறிந்து நடந்துகொள்ளாத மனைவி, மனைவி அல்லள். 41
  2. மனைவி மாட்சிமை இல்லாத வாழ்க்கை, வாழ்க்கை அன்று. 42
  3. அன்பு இல்லாத உறவு நட்பு அன்று. 43
  4. ஊதாரிக் கையன் சொல்லைக் காப்பாற்றுபவன் அல்லன். 44 (மலைதல் = அணிந்துகொண்டிர்ருத்தல்)
  5. நெஞ்சைத் தராதவன் நண்பன் அல்லன். 45
  6. தெளிவில்லாமல் கற்பது கல்வி அன்று. 46
  7. வாழ்ந்து பார்க்காமல் வருந்துவது வருத்தம் அன்று. 47 
  8. அறவழியில் நல்காத கொடை, கொடை அன்று. 48
  9. திற வழியில் செய்யாத நோன்பு, நோன்பு அன்று. 49
  10. மறுபிறப்பு பற்றி அறியாமல் மூத்த மூப்பு, பூப்பு அன்று. 50


பாடல்

5. அல்ல பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
  1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள். 41
  2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று. 42
  3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று. 43
  4. சோரக் கையன் சொல்மலை அல்லன். 44
  5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன். 45
  6. தேராமல் கற்றது கல்வி அன்று. 46
  7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று. 47
  8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று. 48
  9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. 49
  10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று. 50


மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment