நல்லது அன்று
பெரிது அன்று
“நன்று
பெரிது ஆகும்” – தொல்காப்பியம் உரியியல்
ஆரவாரம் மிக்க உலகில் வாழ்பவர்களுக்கெல்லாம்
அது அதுவாகாத நிலை எப்போது?
- குடும்ப நீரோட்டம் அறிந்து நடந்துகொள்ளாத மனைவி, மனைவி அல்லள். 41
- மனைவி மாட்சிமை இல்லாத வாழ்க்கை, வாழ்க்கை அன்று. 42
- அன்பு இல்லாத உறவு நட்பு அன்று. 43
- ஊதாரிக் கையன் சொல்லைக் காப்பாற்றுபவன் அல்லன். 44 (மலைதல் = அணிந்துகொண்டிர்ருத்தல்)
- நெஞ்சைத் தராதவன் நண்பன் அல்லன். 45
- தெளிவில்லாமல் கற்பது கல்வி அன்று. 46
- வாழ்ந்து பார்க்காமல் வருந்துவது வருத்தம் அன்று. 47
- அறவழியில் நல்காத கொடை, கொடை அன்று. 48
- திற வழியில் செய்யாத நோன்பு, நோன்பு அன்று. 49
- மறுபிறப்பு பற்றி அறியாமல் மூத்த மூப்பு, பூப்பு அன்று. 50
பாடல்
5. அல்ல பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு
எல்லாம்-
- நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள். 41
- தாரம் மாணாதது வாழ்க்கை அன்று. 42
- ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று. 43
- சோரக் கையன் சொல்மலை அல்லன். 44
- நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன். 45
- தேராமல் கற்றது கல்வி அன்று. 46
- வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று. 47
- அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று. 48
- திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. 49
- மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று. 50
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment