![]() |
சிதடி \ கறையான் |
பயனற்றது
துய்த்தல் = பயன்படுத்துதல்,
ஆரவாரம் மிக்க இந்த உலகத்தில் மக்களுக்குப்
பயனற்றது எது?
- பழிக்கப்படும் செல்வம் வறுமையைக் காட்டிலும் பயனற்றது. 31
- அளவுக்கு மிஞ்சிய துணிச்சல் பேடியைக் காட்டிலும் பயனற்றது. 32
- பழிபாவம் செய்ய நாணாத வாழ்க்கை பசியோடு கிடப்பதைக் காட்டிலும் பயனற்றது. 33
- பிறரைப் பேணாத ஈகை கொடுக்காமல் இருப்பதைக் காட்டிலும் பயனற்றது. 34
- செயலாற்றாமல் மேற்கோள் காட்டுதல் அரித்துத் தின்னும் கறையானைக் காட்டிலும் பயனற்றது. 35
- ஒப்புக்குப் பொய்யாக வேளாண்மை செய்தல் உயிரைக் கொன்று தின்னும் புலைத்தொழிலைக் காட்டிலும் பயனற்றது. 36
- கொடுத்ததை வாங்கிக்கொண்டு உதாசீனப் படுத்தல் கொடுமை செய்வதைக் காட்டிலும் பயனற்றது. 37
- அறிவில்லாதவன் துணை தனிமையில் இருப்பதைக் காட்டிலும் பயனற்றது. 38
- ஏளனப்படுத்தப்படும் மூப்பு சினம் கொள்ளப்படுவதைக் காட்டிலும் பயனற்றது. 39
- தனக்குத் தானே இன்பம் துய்த்தல் தனிமை வாழ்க்கையை காட்டிலும் பயனற்றது. 40
பாடல்
4. துவ்வாப்
பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு
எல்லாம்-
- பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது. 31
- கழி தறுகண்மை பேடியின் துவ்வாது. 32
- நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. 33
- பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது. 34
- செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது. 35
- பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது. 36
- கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது. 37
- அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது. 38
- இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது. 39
- தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது. 40
மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி
= பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
No comments:
Post a Comment