Pages

Friday, 24 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu 3

கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் துன்பம்.
நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.
’கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.
தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.

பாடல்

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
                               
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment