ஈரம் உலர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது
உழுவதற்கு எருது இல்லாத உழவனுக்குத் துன்பம்.
போரில் கருவி இல்லாமல் போரிட நேரும்போது
துன்பம்.
செல்வம் படைத்தவரைப் பகைத்துக்கொள்ளுதல்
துன்பம்.
வலிமை படைத்தவனுக்குத் துன்பம் செய்தல் துன்பம்.
பாடல்
எருது இல் உழவர்க்குப்
போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா
செயல்.
4
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment