Pages

Friday, 24 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu 1

கணவனிடம் பிடிப்பு இல்லாத மனைவியின் மேனி அழகு துன்பம்.
தந்தை இல்லாத மகனின் அழகு துன்பம்.
அந்தணர் இல்லத்தில் உண்ணல் துன்பம்.
மந்திரம் பலிக்காவிட்டால் துன்பம்.

பாடல்

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின். 1
                               
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment