நல்லார்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றேஅவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று. (8)
- நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது.
- நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது.
- நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது.
- நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது.

Goodman | நல்லார்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)
No comments:
Post a Comment