தீயார்
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதேஅவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது. (9)
- தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது.
- யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது.
- தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது.
- தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது.

Bad man | தீயார்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)
No comments:
Post a Comment