Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 33

தந்தை மகளைத் தர
மணமகன் ஏற்று மணத்தல்

நாடறியும் திருமணம்

  • நெருக்கமாகக் கட்டிய மாலையைப் போட்டு உன் பெற்றோர்கள் உன் முன்கைகளைப் பற்றி எனக்குத் தர நான் நாடறியும் நல்ல திருமணம் செய்துகொள்ளும் விழா எடுப்பேன். சிலநாள் கலங்காதிருப்பாயாக – என்றான்.
  • அன்பு மொழிகள் அனைத்தையும் சொன்னான்.
  • பசுவுக்குத் துணையாக வரும் காளைபோல் என்னுடன் வந்தான்.
  • ஊருக்குள் நுழையும் வாயில் வரையில் வந்தான்.
  • ஊரில் மாலைக்காலத்து முழவொலி கேட்டது.
  • அங்கே தலைவியை நிறுத்திவிட்டுத் திரும்பிவிட்டான்.
அன்றுமுதல் ---

He assured that he will marry me soon, with the ceremony of my father giving me to his hands.
Saying these words, he followed me up to the border our village.
Leaving me there he takes his farewell.
There was band music in the village at that time.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

துனைஇய மாலை துன்னுதல் காணூஉ          230
"நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர
நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள்        
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!" என,          
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து,           235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்,          
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன். அதற் கொண்டு,         

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment