Pages

Wednesday, 6 August 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 245


It is bad that I had lost my complexion excelled by the play-mates. But it is better to compare the news of his bad behavior come to public, the lady confesses to her friend.

This is a poem compiled by MAALAI MAARAN
2nd century B.C.

245. 

நெய்தல் கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மாலை மாறன் பாடல்

கடலோரக் கானலில் விளையாடும்போது விளையாட்டுத் தோழிமார் உற்று உற்றுப் பார்த்துப் பாராட்டிய என் நல்லழகு போனது துன்பந்தான். என்றாலும் அதை விடப் பெருந்துன்பம் அவன் செய்த கொடுமை பலருக்கும் தெரிந்துவிட்டதுதான்.

No comments:

Post a Comment