Pages

Monday, 4 August 2014

அத்துவைதம் துவைதம் விசிட்டாத்துவைதம் – விளக்கம்

வேதாந்தம்
அத்துவைதம்
துவைதம்
விசிட்டாத்துவைதம் 
கடவுள் நாராயணன் என நம்பும் வேதாந்திகளின் தென்னிந்தியக் கோட்பாடு மூன்று வகைப்பாட்டுடன் காணப்படுகிறது.
அத்துவைதம் துவைதம் விசிட்டாத்துவைதம் என்பன அவை. இந்தக் கோட்பாடுகளை விதைத்தவர் மூவர்.
  1. 1.   அத்துவைதம் - ஊர் காலடி (கேரளா) - ஆதிசங்கரர் ஆண்டு 400-450
  2. 2.   விசிட்டாத்துவைதம் ஊர் ஸ்ரீபெரும்புதூர் (தமிழ்நாடு) - இராமானுஜர் ஆண்டு 1017-1137                         
  3. 3.   துவைதம் ஊர் உடுப்பி (கர்நாடகா) - மத்துவர் ஆண்டு 1193()1238-1317
இவர்கள் என்ன கண்டார்கள்?

  • ஆன்மா = ஆ = பசு = ஆன்மா (ஆன்பால், ஆவின்பால் என்பது போன்ற புணர்ச்சி) – தமிழ்
  • ஆத்மா = வடசொல் (ஆத்மீ என்பது போன்றது)

  1. ஒருமை (தமிழ்) = அத்துவைதம் (வடசொல்) இரண்டற்றது = அ+த்வைதம் = பரமாத்மாவுக்குள் சீவாத்மா உள்ளது. சீவாத்மாவுக்குள் பரமாத்மா உள்ளது, இரண்டும் வெவ்வேறாக ஒன்றுக்குள் ஒன்று உள்ளது.
  2. இருமை (தமிழ்) = துவைதம் (வடசொல்) = த்வா = தோ =  இரண்டு. பரமாத்மா நம்மைக் காக்கிறார். நாம் பரமாத்மாவைப் போற்றுகிறோம். பரமாத்மாவும் சீவாதமாவும் வெவ்வேறு நிலை.
  3. சீர்மை (தமிழ்) = விசிட்டாத்துவைதம் (வடசொல்) = வி என்பது சீர் பெற்றுள்ள சிறப்பைக் குறிக்கும். ஒப்புநோக்குக – விநாயகர் என்னும் சொல் சிறந்த நாயகரைக் குறிக்கும். = விசிஷ்டம்+அத்துவைதம் = விசேஷ அத்துவைதம். நாமும் பரமாத்மாவும் ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறோம்.


வேதாத்திரி மகரிசி 
இவற்றை 
எளிமையான 
உவமைகளால் 
விளக்குகிறார்.  




  1. இருமை – பசியோடு நாம் (1), உணவு (2)
  2. ஒருமை – உணவை உண்டோம். வயிற்றுக்குள் உணவு
  3. சீர்மை – உணவு செரிமானம் ஆகி வலிமையாக மாறிய நிலை

No comments:

Post a Comment