Pages

Thursday, 31 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 228


Though he is far away in distance it is adjoining with my heart, the lady feels.
He is far away from me in a village hut where in the court-yard of which waves of sea water come and retreat in littoral land and plant THAAZAI blossoms as bird KURUGU (image) dressing its wing.

This is a poem compiled by SEYTHI VALLUVAN PERUNJATTAN
2nd century B.C.

228. நெய்தல்

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு (படம்) உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.

கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் பாடல்

அவர் நீண்ட தொலைவில் உள்ள நாட்டில் இருக்கிறார் என்றாலும் என் நெஞ்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்.

அவர் தண்கடல் நாட்டில் இருக்கிறார். அவர் இருக்கும் கானல்நிலச் சிறுகுடி முற்றத்தில் விழுது இறங்கும் தாழை குருகுப் பறவை சிறகை விரிப்பது போல் பூ விரித்து மலரும் இடமாகும். 

No comments:

Post a Comment