Pages

Saturday, 19 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 188


Flowers MULLAI blossom in garden. Flowers KAAR (glory lily - image) blossom in forest. Evening time is falling to me in loneliness. He who made my ornaments loose not yet comes.

This is a poem compiled by MALLANAR son of Alakkar Gnalalar of Madurai village.
2nd century B.C.

188. முல்லை

முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் (படம்) வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல்

(வீட்டில்) முல்லைப்பூ முற்றிப் பூக்கப்போகிறது. காட்டில் கார்த்திகைப் பூவும் முற்றிவிட்டன. மாலைக் காலமும் வந்துவிட்டது. என் மகிழ்வை அவை கொல்லப் போகின்றன. என் அணிகலன்களைப் கழலச் செய்த அவர் மட்டும் இன்னும் வரவில்லை. 

No comments:

Post a Comment