Pages

Monday, 7 July 2025

இல்லாண்முல்லை 10-4-5

  • கணவனை வாழ்த்திக்கொண்டு, நல்ல மனைவி வாழும் இல்லத்தை, மேம்படுத்திக் கூறுவது இல்லாள் முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

’கல்’ என் நீர் வேலிக் கணவன் கழல் வாழ்த்தி 
ஒல்லும் வகையால் விருந்து ஓம்பிச் - செல்லும் தம்
இல்-செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லாப்
புல்-செல்வம் பூவா புகழ். 

  • அவளுக்கு அவள் கணவன் நிலத்துக்கு நீரால் சூழப்பட்ட வேலி போன்றவன். 
  • அவள் அவனை வாழ்த்திக்கொண்டு வாழ வேண்டும். 
  • தன்னால் முடிந்த அளவு விருந்தினரைப் பேணவேண்டும்
  • இப்படி வாழ்வதுதான் "இற்செல்வம்"
  • இரந்தவர்க்கு ஈயாத அற்பச் செல்வம் குடும்பத்துக்குப் புகழைத் தராது.  

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment