Pages

Monday, 7 July 2025

பகட்டு முல்லை 10-4-6

  • பகடு என்பது வயலில் உழைக்கும் எருத்துமாடு 
  • உழைத்தல், சுமையைத் தாங்கல் ஆகியவற்றால் மனைக்கிழவனை (இல்லத் தலைவனை) எருதொடு பொருத்தி மனைவி கூறுவது பகட்டு முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

உய்த்தல் பொறுத்தல் ஒழிவு இன்று ஒலி வயலுள்
எய்த்தல் அறியாது இடை இன்றி - வைத்த
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எம் கணவர் நேர். 

  • எருது நுகத்தைத் தாங்கி வண்டியை  இழுத்துச் செல்லும். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வயலில் உழைக்கும். 
  • எம் கணவர் குடும்பத்தை வழிநடத்திச் செல்வார். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வயலில் உழைக்கும். 
  • அதனால் எம் கணவர் வயலில் பாடுபடும் மாடு போன்றவள், என்கிறாள் மனைவி 

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

உழைக்கும்
பகடும்
உழவனும்


No comments:

Post a Comment