- பகையரசனை வென்ற அரசனின் தேர் வருதல் பற்றிக் கூறுவது தேர் முல்லை எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
தீர்ந்து வணங்கித் திறை அளப்பத் தெம் முனையுள்
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் - சார்ந்து
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும்
திரி கோட்ட மா இரியத் தேர்.
- பகையரசன் திறை அளந்தான்.
- போர் முனையிலிருந்து எம் கேள்வர் திரும்பினார்
- தேரில் திரும்பினார்
- கொம்பு இல்லாத மான் (குதிரை) முறுக்கிய கொம்பு இருக்கும் மான் ஆகியவை இப்போது புல்லை மேய்ந்துகொண்டிருக்கின்றன.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 157
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment