Pages

Sunday, 6 July 2025

கார் முல்லை 10-4-2

  • போர்ப் பாசறையிலிருந்து தலைவன் திரும்புவதற்கு முன் வந்த கார்காலம் பற்றிக் கூறுவது கார் முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

புனையும் பொலம்படைப் பொங்கு உளைமான் திண் தேர்
துனையும் துனைப்படை துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாரா முன்னம் 
கடல் முகந்து வந்தன்று கார். 

  • அழகிய அணிகள் பூட்டிய குதிரை. 
  • பொங்கும் உளை மயிரைப் பிடரியில் கொண்ட குதிரை. 
  • தேரில் இந்தக் குதிரைகள் பூட்டப்படவில்லை
  • போர் முகத்தில் பகைவரை அழிப்பதிலேயே அவன் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
  • கார்காத்தில் திரும்பிவிடுவேன் என்று சொன்ன அவர் இல்லம் திரும்பவில்லை
  • அதற்குள் கடலில் நீரை முகந்துகொண்டு கார்மேகம் வந்துவிட்டது. 

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment