Pages

Sunday, 6 July 2025

முல்லை 10-4-1

  • அகன்ற மார்பினை உடைய ஆண்மகன் தான் விரும்பும் பெண்ணைப் புணரும் மகிழ்ச்சியைக் கூடுவது முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

ஊதை உலர ஒசிந்து மணம் கமழும் 
காதை போல் முல்லைக் கொடி மருங்குல் - பேதை
குவைஇ இணைந்த குவி முலை ஆகம் 
கவைஇக் கவலை இலம். 

  • ஊதைக் காற்று வீசுகிறது
  • அவள் மணம் கமழப் பூத்திருக்கும் முல்லைக்  கொடி போன்ற இடையினை உடையவள். 
  • வஞ்சகம் அறியாப் பேதை. 
  • குவிந்து இணைந்திருக்கும் முலையாள்
  • அவளது முலை ஆக்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு அவன் கவலை இல்லாமல்  இருக்கிறான்.   

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment