Pages

Sunday, 6 July 2025

காடு வாழ்த்து 10-3-6

  • நெய்தல் பறை முழக்கத்துடன் பிணம் இடு காட்டை வாழ்த்துதல் காடு வாழ்த்து எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

முன்புறம் தான் காணும் இவ் உலகை இவ் உலகில் 
தன் புறம் கண்டு அறிவார் தாம் இல்லை - அன்பின்
அழுநார் கண் நீர் விடுத்த அறு ஆடிக் கூகை 
கழுது ஆர்ந்து இர வழங்கும் காடு. 

  • உலகை நாம் நம் முன்புறம் காண்கிறோம். 
  • நாம் இறந்த பின் நம் உடம்பு பிணத்தை வைத்துவிட்டுச் செல்லும்  இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 
  • நம்மைப் பிரிந்தவர் அழும் கண்ணீர் ஆறு அங்கு ஓடுகிறது. 
  • அதில் குளித்த கூகை, பேய் ஆகியன அங்குத் திரிகின்றன. 
  • அங்குச் செல்லலாதவர் ஆரும் இல்லை.  

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment