ஆனிரை கவரும் போர் பற்றிக் கூறுவது வெட்சிப் படலம்
இதன் செயல்கள் வெட்சித் திணையின் துறைகள்
இந்தச் செயல்துறைகள் பற்றிக் கூறும் பாடல்கள்
- பகைநாட்டுப் பசுக்களைக் கர்ந்து வர மன்னன் ஏவுவான்
- மறவன் தானே செல்வதும் உண்டு
- அதற்காக வெட்சிப் பூ சூடுவர்.
- அப்போது மற்றவர்கள் பேசிக்கொள்ளும் சகுனம் விரிச்சி கேட்பர்
- வில்லேர் உழவர் கல் நிலப் பாதையில் செல்வர்
- பகை நாட்டில் வேவு பார்ப்பர்
- பகைவர் ஊரின் வாயிலை அடைத்துக்கொண்டு தங்குவர்
- பகைவரைக் கொன்று ஊரைச் சூறையாடுவர்
- கன்றுகளுடன் பசுக்களைக் கவர்வர்
- இரு பாலாருக்கும் இடையில் போர் நிகழும்
- பசுக்களைக் காட்டு வழியில் ஓட்டிக்கொண்டு வருவர்
- தம் ஊரில் தோன்றும்போது சுற்றம் மகிழும்
- பசுக்களை ஊர் மன்றத்தில் நிறுத்துவர்
- கவர்ந்து வந்த பசுக்களைப் பங்கிட்டுக் கொடுப்பர்
- எல்லாருக்கும் கள் விருந்து
- போரில் உதவியவர்களுக்குப் பசுக்கொடை
- பகைவர் நிலைமையை அறிந்து சொன்னவருக்கு அதிகச் சிறப்பு
- புள் நிமித்தம் சொன்னவருக்கு பசு
- போரில் துடி முழக்கியவருக்கு
- கொற்றவையை போற்றல்
- முருகனுக்கு வெறியாட்டம்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 42
பாடல் - சொல் பிரிப்பு
| வெட்சி |
No comments:
Post a Comment