Pages

Wednesday, 4 June 2025

வெறியாட்டு 1-21

எண்ணிய செயல் நிறைவேற மகளிர் வேலனோடு சேர்ந்து வெறியாட்டம் போட்டுக்கொண்டு வள்ளிக்கூத்து ஆடுவது "வெறியாட்டு" என்னும் போர்த்துறை. 
இதனை விளக்கும் பாடல்:

காணில் அரனும் களிக்கும் கழல் மறவன் 
பூண் இலங்கும் மென் முலைப் போது அரிக் கண் - வாணுதல்
தான் முருகு மெய்ந்நிறீஇ தாமம் புறம் திளைப்ப
வேல் முருகற்கு ஆடும் வெறி.  

மறவன் மகள் வாணுதல் வெறி ஆடுவாள்
வேல் முருகனை வேண்டிக்கொண்டு ஆடுவாள் 
அவள் பூண் அணிந்த முலை கொண்டவள்
தாமரை மொட்டு போன்று அரிக்கண் கொண்டவள் (அரி = வரி)
அவள் ஆடும்போது அவள் உடம்பில் முருகன் ஏறியிருப்பான்.

இதனைக் கண்டால் சிவனும் களிப்படைவான்.

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment