Pages

Tuesday, 3 June 2025

தந்துநிறை

கவர்ந்து வந்த ஆனிரைகளைத் தன் ஊர் மன்றத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துதல் "தந்துநிறை" என்னும் துறை ஆகும். 
இதற்குப் பாடல்:

தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த 
வண்டு ஆர் கமழ் கண்ணி வாழ்க என்று - கண்டாள் 
அணி நிரை வாள் முறுவல் அம்மா எயிற்றி 
மணி நிரை மல்கிய மன்று. 

அவள் அம்மா எயிற்றி / அழகிய மாமை நிறம் கொண்ட எயிற்றி. 
சிரிக்கும் பல்லுடன் கண்டாள்.
ஊர் மன்றத்தில்  மணி ஒலிக்கும் பசுக்கூட்டம் நிற்பதைக் கண்டாள். 
தடுக்க முடியாத ஆசையுடன் தன்னை மணந்தவன் ஆனிரைகளைக் கவர்ந்து வந்திருக்கிறான்
"அவன் குடிப் பூ வாழ்க" என்று அவள் வாழ்த்தினாள்.

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment