Pages

Tuesday, 3 June 2025

பாதீடு 1-14

கவர்ந்து வந்த ஆனிரைகளை, ஊர் மக்கள் கவர உதவிய அவரவர் தரத்துக்கு ஏற்பப்  பகிர்ந்து கொடுத்தல் "பாதீடு" என்னும் புறத்துறை. 
இதனை உணர்த்தும் பாடல்:

ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தார்க்கும் 
புள் வாய் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை 
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில் 
கூறு இட்டார் கொண்ட நிரை. 

கொண்டுவந்த பசுக்களை 
வாள்போர் செய்தவர் 
ஒற்று பார்த்துச் சொன்னவர் 
புள் சகுனம் சொன்ன புலவர்
போரிட்ட மறவர் 
முதலானோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தனர்.

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment