Pages

Friday, 6 June 2025

குடைநிலை 3-3

வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துள்ள மன்னன் புகழைப் 
புலவர்கள் போற்றிப் பாட 
அவன் தன் வெண்கொற்றக் குடையை, 
புறவீடு என்னும் பாடிவீட்டுக்குக் கொண்டுசெல்வது 
"குடைநிலை" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 
இதனைச் சொல்லும் பாடல்:

முன்னர் முரசு இரங்க மூரிக் கடல் தானைத்
துன் அரும் துப்பில் தொழுது எழா - மன்னர் 
உடைநாள் உலந்தனவால் ஓத நீர் வேலிக் 
குடைநாள்  இறைவன் கொள

  • முரசு முழங்கிற்று. 
  • பெரிய கடல் போன்ற படை தன் வலிமையை வெளிப்படுத்திக்கொண்டு அவனைத் தொழுது எழுந்தது. 
  • மன்னன் தன் வெண்கொற்றக் குடையைப் பாடிவீட்டுக்கு எடுத்துச் சென்றான். 
  • அப்போது பகைமன்னரின் வாழ்நாள் உலர்ந்து ஈரம் குறையலாயிற்று.   

வஞ்சிப்ப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment