Pages

Friday, 6 June 2025

வஞ்சி அரவம் 3-2

முரசும் களிறும் முழங்க 
வாள்-படை சினத்துடன் எழுந்தது பற்றிக் கூறுவது 
"வஞ்சி அரவம்" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 
இதனைச் சொல்லும் பாடல்:

பௌவம் பணை முழங்கப் பற்றார் மண் பாழாக 
வௌவிய வஞ்சி வலம் புனையச் - செவ்வேல் 
ஒளிரும் படை நடுவண் ஊழித் தீ அன்ன
களிறும் களித்து அதிரும் கார் 

முரசம் கடல் போல முழங்கிற்று. பகைவர் நிலம் பாழ் ஆகும்படி வஞ்சிப் பூவை வெற்றிப் பூவாக (வலம் = வெற்றி) படை சூடிற்று. ஊழித் தீ போன்ற படைக்கு நடுவில் களிறு இடி போல் முழங்கிற்று.   

வஞ்சிப்ப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

 

No comments:

Post a Comment