வாள் மறவர்
வேந்தன் சிறப்பினைப் பாராட்டுதல்
"வேத்தியல் மலிபு"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
அங்கையுள் நெல்லி அதன் பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடை நிழல் கீழ்த் - தங்கி
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்று அடையார் வேல் வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும்.
அரசனுக்காகப் போரில் உயிர் துறத்தல் பெருமிதம் உடையது(மறவன் சொல்கிறான்)
- அரசன் தேன் துளிக்கும் மாலை அணிந்தவன்.
- அவன் உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக்கனி போல் பயன் தருபவன்.
- அவன் ஆட்சிக்குடை நிழலில் வாழ வேண்டும்.
- வாள்-போர் குற்றம் உடையதுதான்.
- என்றாலும் அவனுக்காகப் போரிடும்போது பகைவன் வேல் பாய்ந்து உயிரைக் கொடுப்பதில் ஒரு பெருமிதம் இருக்கிறது.
No comments:
Post a Comment