பறவை சகுனத்தைப் பொருட்படுத்தாமல் சென்று
போரிட்டு வெற்றி தேடித் தந்த வீரனுக்கு
மன்னன் சிறப்பு செய்தல்
"பிள்ளைப் பெயர்ச்சி"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
பிணங்கு அமருள் பிள்ளை பெயர்ப்பப் பெயராது
அணங்கு அமர் செய்து ஆள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளன் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து.
- பிள்ளை = காரிக்குருவி
- தண்ணடை = மருத நிலம்
- வணங்காச் சிலை அளித்த தோளன் - வேந்தன்
காரிக்குருவி சொன்ன சகுனத்தை மீறிப் போருக்குச் சென்று (குருவிச் சகுனத்தைப் பகைவனுக்கு உரியதாக்கி) போரில் வெற்றியைத் தேடித் தந்த சின விடலைக்கு வேந்தன் மருத நில வயல்களை விருதாக வழங்கிச் சிறப்பு செய்தான்.
No comments:
Post a Comment