Pages

Tuesday, 3 June 2025

பிள்ளை வழக்கு 1-18

புள் நிமித்தம் சொன்னவர்க்கு, 
குறை ஏதும் இல்லாமல் பசுக்களைக் கொடுத்தல் 
"பிள்ளை வழக்கு" என்னும் போர்த்துறை. 
இதனைக் கூறும் பாடல்:

புல்லார் நிரை கருதி யாம் செல்லப் புள் நலம் 
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்  - சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு
குடம் சுட்டு இனத்தால் கொடு. 

பலரும் தெரிந்துகொள்ளுமாறு பறவைகளின் நிலைமையைக் கணித்துப் புள்-சகுனம் சொன்னவர்க்குக் கொடுத்தல் கடமை என்று சுட்டிக்காட்ட வேண்டுவதில்லை. நாலு குடம் பால் கறக்கும் பசுவைத் தருதல் வேண்டும். 

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment