ஒருவர் உணர்வில் தோன்றும் பண்புகளை விளக்குவது குணத்தன்மை
உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்து உரையும்
தள்ள விழி நீர் அரும்பத் தன் மறந்தாள் - புள் அலைக்கும்
சேந்தாமரை வயல் சூழ் தில்லைத் திருநடம் செய்
பூந்தாமரை தொழுத பொன்
- அவன் பொன் போன்றவள்
- தில்லையில் நடனம் ஆடுபவனைத் தொழுதாள்
- தாமரையைப் பறவைகள் கோதும் வயல்களைக் கொண்டது தில்லை
- தொழுதவள் உள்ளம் குளிர்ந்தது
- அவள் உடம்பில் இருக்கும் மயிர்கள் சிலிர்த்தன
- அவள் உரை தடுமாறியது
- கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பிற்று
- அவள் அவன் நினைவில் தன்னையே மறந்தாள்.
எந்தப் பொருளாய் இருந்தாலும் அதன் மெய்மைக் கூறுகளை விளக்குவது தன்மை அணி
தண்டியலங்காரம் PDF பக்கம் 58
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment