Pages

Friday, 30 May 2025

இடைநிலைத் தொழில் தீவகம்

தொழிற்சொல் பாடலின் நடுவில் நின்று பலவற்றோடு பொருந்துதல் இடைநிலைத் தொழில் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

எடுக்கும் சிலை நின்று எதிர்த்தவரும் கேளும் 
வடுக் கொண்டு உரம் துணிய வாளி - தொடுக்கும் 
கொடையும் திரு அருளும் கோடாத செங்கோல்
நடையும் பெரும் புலவர் நா

பாடல் - செய்தி

  • அவன் வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். 
  • அவனை எதிர்த்தவரும், எதிர்த்தவரின் உறவினர்களும் வடு ஆகும்படிப் பெரும்புண் பட்டனர்
  • நெஞ்சில் வாள் வெட்டுப் பட்டனர் 
  • இதனைப் புலவர் நாக்கு பாடலாகத் தொடுக்கும். 
  • அவன் கொடையைப் பாடலாகத் தொடுக்கும். 
  • அவன் திருவைப் பாடலாகத் தொடுக்கும். 
  • அவன் அருளைப் பாடலாகத் தொடுக்கும். 
  • அவன் கோடாத செங்கோலைப் பாடலாகத் தொடுக்கும். 
  • அவன் நன்னடத்தையைப் பாடலாகத் தொடுக்கும். 

குறிப்பு

இப்படிப் பாடலின் இடையில் உள்ள தொடுக்கும் என்னும் தொழிற்சொல் பலவற்றுக்குத் தீவகமாக நிற்பதால் இது இடைநிலைத் தொழில் தீவகம்.

தண்டியலங்காரம் PDF பக்கம் 107 | நூல் பக்கம் 82
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment