தொகைநிலைத் தொடர் சொற்கள் மிகுதியாக வரப் பாடும் செய்யுள் வலி என்று கூறப்படும்.
கால் நிமிர்ந்தால் கண் பரிவ வல்லியோ, புல்லாதார்
மான் அனையார் மங்கல நாண் அல்லவோ - தான
மழைத் தடக்கை வார் கழல் கால் மான வேல் கிள்ளி
புழைத் தடக்கை நால்வாய் பொருப்பு
- கிள்ளி தனம் தருவதில் மழை போன்ற கையை உடையவன்
- கழல் அணிந்த காலை யானைச் சேனத்தில் இருக்கும் வாரில் வைத்திருப்பவன்
- அவன் உள்ளே துளை இருக்கும் கையினை உடையது
- பெரிய வாயினை உடையது
- மலை போன்ற தோற்றம் கொண்டது
- அதன் கால் போரில் நடந்தால் கண்ணால் பார்க்க முடியுமா
- அவனோடு சேர்ந்திருக்காதவர் மனைவியின் மங்கல நாண் அல்லவா கண்ணால் பார்க்க முடியாமல் போய்விடும்.
- மழைத்தடக்கை
- வார்கழல்
- கழற்கால்
- மானவேற்கிள்ளி
- புழைத்தடக்கை
- நால்வாய் - என்பன இப்பாடலில் வரும் தொகைச்சோற்கள்.
செங்கலசக் கொங்கைச் செறி குறங்கின் சீறடிப் பேர்
பொங்கு அரவ அல்கும் பொரு கயல் கண் - செங்கனி வாய்க்
காருருவக் கூந்தல் கதிர் வளைக்கைக் காரிகைத்தாம்
ஓரு உரு என்று உள்ளதே உண்டு
- நெங்குத்தாக நிமிர்ந்து நிற்கும் கலசம் போன்ற கொங்கை
- நெருக்கமாக இருக்ககும் கால் தொடைகள்
- சிறிய காலடி
- படமெடுக்கும் பாம்பு போன்ற அல்குல்
- போரிடும் கயல் மீன்கள் போன்ற கண்கள்
- சிவந்திருக்கும் கோவைப்பழம் போன்ற வாய்
- கார்மேகம் போன்ற கூந்தல்
- ஒளிரும் வளையலணிந்த கை
- இத்தனையும் காரிகை என்னும் ஓர் உருவில் இருக்கிறது.
- இப்பாடலில் இதுக்கும் தொகைச்சொற்களையும் கண்டுகொள்க
தண்டியலங்காரம் PDF பக்கம் 51
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment