உலகியல் வழக்கத்துக்கு மாறுபடாமல் புகழ்வது செய்யுளில் வரும் காந்தம்
ஒரு பேர் உணர்வுடனே ஒண் இறையும் தேய
வருமே துறவு என்பால் வைத்த - ஒரு பேதை
போது அளவு வாசப் புரிகுழல் சூழ் வாள் முகத்துக்
காது அளவு நீண்டு உலவும் கண்
- நான் என் பெருமையைக் காப்பாற்றும் உணர்வு உடையவன்
- அது என் இறைமை உணர்வு
- அது தேயும்படி
- நான் என்னையே துறக்கும்படி
- ஒரு பேதைப் பெண்
- மணக்கும் மலரணிந்த கூந்தல்
- ஒளிறும் முகம்
- அதில் காது வரையில் நீண்ட கண் - கொண்டவள்
- அவள் கண்ணின் பார்வை
- என் இறைமை உணர்வைத் தேய்த்துவிட்டது.
இது உலக வழக்கத்துக்கு மாறுபடாமல் புகழ்ந்ந வைதருப்ப நெறி
ஐயோ அகல் அல்குல் சூழ் வருதற்கு ஆழித்தேர்
வெய்யோற்கு அனேக நாள் வேண்டுமால் - கை பரந்து
வண்டு இசைக்கும் கூந்தல் மதர் விழிகள் சென்று உலவ
எண் திசைக்கும் போதா இடம்
- இவள் வண்டுகள் பாடும் கூந்தல் உடையவள்
- இவள் பார்வை உலாவ எட்டுத் திசைப் பரப்பும் போதாது
- இவள் அல்குல் அகலமானது
- அதனைச் சுற்றி வர சூரியனுக்கும் பல நாள் வேண்டும்
- ஐயோ
- இப்படி இருக்கிறாளே
இது உலக வழக்கத்துக்கு மாறுபட்டுப் புகழ்ந்த கௌட நெறி
அங்கண் மா ஞாலத்து அகல் விசும்பை முன் படைத்த
பங்கயத்தோன் அந்நாளில் பைந்தொடி தன் - கொங்கைத்
தடம் பெருக ஓங்கும் எனத் தான் நினையாவாறோ
இடம் பெருகச் செய்யா இயல்பு
- உலகில் வானத்தைப் படைத்த பிரமன் இவளைப் படைக்குபோது இவள் கொங்கை பெருக்குமே. அகன்ற வானமே அதற்குப் போதாதே என்று நினைத்துப் பார்க்கவில்லை
இது உலக வழக்கத்துக்கு மாறாகப் புகழ்ந்த கௌட நெறி
தண்டியலங்காரம் PDF பக்கம் 50
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment