Pages

Tuesday, 20 May 2025

செய்யுளில் சமாதி

செய்யுளில் சமாதி என்பதைச் சமாதிச் செய்யுள் எனப் புரிந்துகொள்ள வேண்டும். 

முக்கிய பொருளின் வினையை ஒப்புமை உடைய பொருள்மேல் சார்த்திக் கூறுவது சமாதி முறைமை

அகலிரு விசும்பின் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரும் பல்கதிர் பரிதி (பெரும்பாணாற்றுப்படை)
  • பரிதி இருளைப் பருகிற்று

கன்னி எயில் (நற்றிணை 54)

  • அழியாத கோட்டை

குமரி ஞாழல் (நற்றிணை 54)

  • ஞாழல் மரக் கன்று

விழித்த குவளை கழிப் போது வாக்கிய
கள் உண்டு களித்த வண்டு இனம்
  • வண்டு கள் உண்டது
கடுக்கை வயல் உழவர் காலை தடிய
மடக்கி அரியுண்ட நீலம் - தடம் சேர்ந்து
நீள் அரி மேல் கண் படுக்கும் நீள் நீர் அவந்தியார் 
கோளரி ஏறு இங்கு இருந்த கோ
  • நெல் அறுக்கும்போது அறுபட்ட நீல மலர் நெல் அரிமேல் உறங்கும்
இது இரண்டு நெறியார்க்கும் ஒக்கும்
இதனைக் குண-அலங்காரம் என்ப  

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment