ஐயுற்றதனைத் தேர்ந்து தெளிவது தெரிதரு தேற்ற உவமை
தாமரை நாள் மலரும் தண் மதியால் வீறு அழியும்
காமர் மதியும் கறை விரவும் - ஆம் இதனால்
பொன்னை மயக்கும் புனை சுணங்கினார் முகமே
என்னை மயக்கும் இது
- இவள் முகத்தைத் தாமரை என்றால், நிலா வரும் இரவில் தாமரை தன் பெருமிதத்தை இழந்துவிடும்
- இவள் முகத்தை மதியம் என்றால், மதியில் களங்கம் இருக்கும்
- சுணங்கு = மகளிர் மேனிநிறம், கூச்ச மெய்ப்பாடு, Tingling
- இவள் பொன் போன்ற மேனி நிறம் கொண்டவள்
- இரவிலும் தன் அழகை இழக்காமல், களங்கமும் இல்லாமல் இருக்கும் இவள் முகம் என்னை மயக்குகிறது
- (அவன் அவள் அழகைப் பாராட்டுகிறான்)
தண்டியலங்காரம் PDF பக்கம் 70
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
![]() |
| சுணங்கு |

No comments:
Post a Comment