தாமரை போல் முகம் மலர்கிறது என்றால் அது உவமை
முகம் மலர்வது போல் தாமரை மலர்கிறது என்றால் அது விபரீத உவமை
திருமுகம் போல் மலரும் செய்ய கமலம்
கருநெடுங்கண் போலும் கயல்கள் - அரிவை
இயல் போலும் மஞ்ஞை இடை போலும் கொம்பர்
மயல் போலும் யாம் போம் வழி
- முகம் போலத் தாமரை மலரும்
- கண் போலக் கயல் பிறழும்
- பெண்ணின் இயல் (தோற்றம்) போல, கொம்பில் இருக்கும் மயில் தோன்றும்
- இவற்றைப் பார்த்து, பித்தன் வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்
ஓவத்து அன்ன உண்டு உறை மருங்குல்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வர்முலை அன்ன வண் முகை உடைத்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை (சிறுபாணானாற்றுப்படை)
- சுவரில் எழுதப்பட்ட ஓவியம் போலப் பருமன் இல்லாத இடை
- அதில் முலை என்னும் தாமரை மொட்டு. இந்திரகோபப் பூச்சிகள் போல் பூந்தாதுகள் உதிர்ந்து கிடக்கும் தாமரை மொட்டு.
- இப்படி முகத்தை விரித்துக் காட்டுவது தெய்வத் தாமரை (முலை - தெய்வத் தாமரை)
தண்டியலங்காரம் PDF பக்கம் 71
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment