வெறுக்கத் தக்க இன்னா இசை இல்லாமல் வரும்படிப் பாடப்பட்ட பாடல் ஒழுகிசை எனப்படும். இந்தப் பாடலில் அதனைக் காணலாம்.
இமையவர் மோலி இணைமலர்த் தாள் சூடச்
சமயந்தொறும் நின்ற தையல் - சிமய
மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண்
கலைமடந்தை நாவலோர் கண்.
- வானோர் வணங்கும்
- மலைமகள்
- மலர்மகள்
- கலைமகள்
- அகியோர் நாவலர்க்குக் கண்
ஆக்கம் புகழ் பெற்றது ஆவி இவள் பெற்றாள்
பூக்கள் குழல் கார் பொறை பெற்ற - மாக் கடல் சூழ்
மண் பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்று எம்
கண் பெற்ற இன்று களி.
- செல்வத்துக்குப் புகழ் சேர்ந்தது
- இவன் உயிர் தழைக்கப் பெற்றாள்
- இவள் தலையிலுள்ள கூந்தல் மலர்களைத் தாங்குகின்றன
- மாபலியிடம் மண் பெற்றவனே! நீ வர என் கண் களிப்புறுகிறது
இந்தப் பாடலில் உள்ள செய்திகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாததனவாய் அறுத்து அறுத்து ஒழுகும் இன்னா ஓசை கொண்டுள்ளது.
தண்டியலங்காரம் PDF பக்கம் 47
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment