Pages

Monday, 19 May 2025

உதாரம்

செய்யுளில் சொல்லப்பட்ட செய்தியால் வேறொரு செய்தியை விளங்க வைப்பது உதாரம் எனப்படும் 

செருமான வேல் கிள்ளி தென் உறந்தையார் தம் 
பெருமான் முகம் பார்த்த பின்னர் - ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருள் நசையால் பாராவாம் 
காதலித்துத் தாழ்ந்து இரப்போர் கண்
  • உறந்தைப் பெருமான் கிள்ளியின் முகத்தைப் பார்த்த பின்னர் இரப்போர் உலகில் வேறு யாரையும் பொருளுக்காகப் பார்க்க வேண்டியதில்லை - என்று பாடல் கூறுகிறது. 
கிள்ளி வேண்டிய அளவு பொருள் தருவான் என்பதை இது விளங்க வைக்கிறது. 

அவிழ்ந்த துணி அசைக்கும் அம்பலமும் சீக்கும்
மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து
நிழல் துழாம் யானை நெடுந்தேர் இரவி
கழல்தொழா மன்னவர்தம் கை
  • சூரிய குலத்து மன்னவன் சோழன்
  • அவன் யானை தனக்குப் பகை இல்லையே என்று தன் நிழலோடு போரிடும் 
  • அந்தச் சோழன் கையைத் தொழாதவர் கை
  • கிழிந்த துணியை உடுத்தும் 
  • படுக்க இடம் இல்லாமல் பொதுமக்கள் உறங்கும் சாவடியைக் கூட்டிக்கொண்டிருக்கும்
  • மகிழ்ச்சியோடு உணவளிப்பவர் முன்னர் கையேந்தி நிற்கும்
சோழனைப் பகைத்துக்கொண்டால் தோல்வி உறுதி என்பது இதனால் பெறப்படும் செய்தி. 




மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment