இது என்ன அதிசயம்
நின்னுழையே நின் முகமும் காண்டும் நெடுந்தடம்
தன்னுழையே தன்னையும் காண்குவம் - என்னும்
இது ஒன்றுமே அன்றி வேற்றுமை உண்டோ
மது ஒன்று செந்தாமரைக்கு
- உன்னிடத்தில் உன்னைப் பார்க்கிறேன்
- குளத்தில் தாமரையிடத்தில் தாமரையைப் பார்க்கிறேன். அதில் உன் முகத்தையும் பார்க்கிறேன்
- இதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை
- மது இருக்கும் செந்தாமரைக்கும் உன் முகத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை
பாலினிடம் நீல மணி நிறம் சேர் பான்மை போல்
ஞாலம் பரந்த நகை நிலவும் - மா இருளாம்
வையம் மருவும் மூவிலை வேல் வன்கண் தமருகக் கைச்
செம்மல் கரு மாமை சேர்ந்து
- மூவிலை வேலும் தமருகமும் வைத்திருக்கும் சிவன் வேலின் ஒளி பட்டு உமையின் மாமை நிறமும் மாறி அவன் உடம்பெல்லாம் வெண்மையாகத் தெரியும்
- பாலின் பக்கத்தில் வைத்த நீல மணி, பாலை இருள் நிறம் கொள்ளும்படிச் செய்யும்
- அது போல் உன் சிரிப்பால் உன் நிறமெல்லாம் வெள்ளையாகத் தெரிகிறது
தண்டியலங்காரம் PDF பக்கம் 79
தமிழ்வளப் பாடல்கள்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment