பாயிரம் என்பது ஆயிரம் என்பது போல் ‘இரம்’ என்னும் இடைச்சொல்லைக் கொண்டு முடியும் சொல்.
நூலின் தொடக்கத்தில் நூலைப் பற்றிக் கூறும் செய்தியைப் ‘பாயிரம்’ என்கிறோம்.
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்பாயிர மில்லது பனுவ லன்றே . (நன்னூல்)
ஒரு கோணத்தில் சொல்லாமல் ஆயிரக் கணக்கான கோணங்களில் விரித்துச் சொல்லும் நூலாக இருந்ததாலும் பாயிரம் இல்லாவிட்டால் அதனைப் பனுவல் (கருத்துப் பஞ்சால் நூற்று நெய்யப்பட்ட ஆடை) என்று கொள்ள முடியாது - என்பது இந்த நன்னூல் நூற்பா சொல்லும் கருத்து.
இதற்கு விருத்தியுரை எழுதும் சங்கர நமச்சிவாயர் பாயிரம் இல்லாமல் நூல் நிரம்பாது என்னும்போது வெண்பா ஒன்றால் தெளிவுபடுத்துகிறார்.
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடிமுன்ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்பெய்துரையா வைத்தார் பெரிது
- மாடங்களில் தீட்டப்படும் சித்திரங்கள் போலவும்
- கோயிலுக்குக் கட்டப்படும் கோபுரங்கள் போலவும்
- அழகியர் மேனிக்கு அணிகலன்கள் போலவும்
அணிந்துரை என்னும் பாயிரம் நூலுக்குச் சேர்க்கப்படுகிறது
என்று இந்த வெண்பா தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment