Pages

Monday, 19 May 2025

செய்யுளில் நெகிழிசை

வல்லின எழுத்து இல்லாமல் பாடுவது நெகிசை. 
தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணம் இங்கு ஒப்புநோக்கத் தக்கது

விரவலராய் வாழ்வாரை வெல்வாம் ஒழிவாம்
இரவுலவா வேலை ஒலியே - வரவொழிவாய் 
ஆயர் வாயே அரிவை ஆருயிரை ஈராவோ
ஆயர் வாய் வேயோ அழல்

இந்த வெண்பாவில் வல்லின எழுத்து இல்லை. எனவே இது நெகிசை. இவ்வாறு பாடுவது கௌட நெறி என்று தண்டியலங்காரம் கூறுக்கிறது.

  • காதலரைப் பிரிந்திருப்பவரை வருத்தும் கடல் ஒலியே
  • இரவிலும் ஓயாத கடல் ஒலியே
  • நீ அலையில் வந்து ஒலிப்பதை நிறுத்திக்கொள் 
  • ஆயர் வாயில் வரும் புல்லாங்குழலின் ஒலி இவள் உயிரை அறுப்பது போதாதா
  • ஆயர் வாய் புல்லாங்குழலே இவளை எரிக்கும் தீ.

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment